ஐவர் படுகொலை – கொஸ்கொட சுஜியின் வேலையா? விசாரணை வேட்டையில் 6 பொலிஸ் குழுக்கள்!

நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கொண்ட அரசியல் கட்சியொன்றின் தலைவர் உட்பட ஐவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள பயங்கர சம்பவமொன்று நேற்று காலை அரங்கேற்றிய, நிலையில் அது தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையொன்றுக்காக சமன் பெரேரா உட்பட ஐவர் வெள்ளை நிற டிப்பெண்;டரில் பயணித்துள்ளனர். தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த வெளியேறும் பகுதிக்கு அருகில் காலை உணவை உண்பதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் அவர்களின் டிப்பெண்;டரை பின்தொடர்ந்து வந்த பச்சை நிற பஜிரோவில் இருந்து இறங்கிய இருவர், சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதன்போது சாரதியைதவிர ஏனையோர் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பியோட முற்பட்டுள்ளனர். அவர்களை துரத்திச்சென்று சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே நால்வரும், தங்காலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவரும் பலியாகியுள்ளனர். சாரதி டிப்பெண்டருக்குள்ளேயே உயிரிழந்து கிடந்துள்ளார்.

பெந்தொட்ட, இதுரவ, குருணாகலை மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இது பாதாள குழுவின் வேலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர், சந்தேக நபர்களை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அதேவேளை, வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கொஸ்கொட சுஜி என்ற பாதாள குழு உறுப்பினரின் ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. ரி – 56 துப்பாக்கியே தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டில் சல்லடை
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பிறகு, குருணாகலில் உள்ள சமன் பெரேராவின் வீட்டில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சமன் பெரேரா குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக சிறை தண்டனையையும் எதிர்கொண்ட நபர், எனவே, அவரது வீட்டில் ஆயுதங்கள் உள்ளனவா என்ற நோக்கிலேயே சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும், சந்தேகத்துக்கிடமாக எந்தபொருளும் சிக்கவில்லை.

கடந்த பொதுத்தேர்தலில் அபே சன பலவேகய கட்சி போட்டியிட்டது, அக்கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்தது. அந்த தேசிய பட்டியல் ஊடாக அத்துரெலிய ரத்தன தேரர் நாடாளுமன்றம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles