நுவரெலியா நகரசபை மற்றும் பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அறுவர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர்.
சஜித் பிரேமதாசவை நேரில் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தனர்.
ஐ.தே.கவின் நுவரெலியா நகரசபை உறுப்பினர்களான விஜயகுமார், மஹிந்த சில்வாவும், பிரதேச சபை உறுப்பினர்களான சரத் குமார், இந்தபால, சாந்தனி ஹெட்டியாராச்சி ஆகியோரே இவ்வாறு கட்சி தாவியுள்ளனர்.
