கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை 16 ஆயிரத்து 847 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 4,106 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 9,278
பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 3,473 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 108 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 14 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில்1 7 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.