கம்பளையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறுவனும் பலி!

கம்பளையில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றி மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறுவனும் இன்று (10) உயிரிழந்துள்ளார்.

கம்பளை, பிபில பகுதியைச் சேர்ந்த மொஹமட் அயான் என்ற 4 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கம்பளை நகரில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றின் வளாகத்தில் பாரிய மரமொன்றின் கிளை கடந்த 5 ஆம் திகதி முறிந்து விழுந்ததில் 5 வயது மாணவன் ஒருவர் பலியானார்.

படுகாயம் அடைந்த மேலும் இரு மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அவர் கண்டி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றுமொரு சிறுவன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

Related Articles

Latest Articles