கருணா அம்மானை சந்திப்பதற்கு கத்தி மற்றும் அரிவாளுடன் சென்ற நபரொருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் நேற்று தங்கியிருந்த கருணா அம்மானை, சந்திக்க சென்ற நபரை கடமையில் நின்ற பொலிஸார் சோதனைக்குட்படுத்தியவேளை அவரிடமிருந்து கத்தி, வாள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
குறித்த கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை வயலிற்கு பசைளை இடுவதற்காக எடுத்து சென்றதாகவும், திரும்புகையில் கருணா அம்மானை சந்தித்து செல்ல
சென்றதாகவும் குறித்த சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
