‘கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற இருவருக்கு கொரோனா’

டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் மிட்போட் தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவருக்கும், நோர்வூட் வெஞ்சர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளங்கன் வைத்தியசாலைக்குநேற்று சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் என்டிஜன்ட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் இருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்படவுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles