குட்டி தேர்தலிலும் தமிழ் மக்கள் பேராதரவு வழங்குவார்கள்!

குட்டி தேர்தலிலும் தமிழ் மக்கள் பேராதரவு வழங்குவார்கள்!

“ வடக்கு தமிழ்க் கட்சியினர் எம்மை விமர்சிப்பதால் அவர்கள் எதனையும் சாதிக்க முடியாது. இந்த விமர்சனங்க ளால் எமது பக்கம் வந்துள்ள தமிழ் மக்களைத் தமது பக்கம் மீண்டும் இழுக்க தமிழ்க் கட்சியினரால் முடியாது.”

– இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார் என தமிழ் மின்னிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“ வடக்கு தமிழ் மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளார்கள். இந்நிலையில் அந்த மக்கள்இ நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் எமது கட்சிக்கு ஆதரவு வழங்குவதைத் தடுக்கும் வகையில் வடக்கு தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ் தர்கள் என்று சொல்லப்படுபவர்கள்இ நான் உள்ளிட்ட எமது கட்சியின் உறுப்பினர்களைத் தற்போது விமர்சித்து வருகின்றார்கள்.” எனவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மக்களின் அரசியல்இ பொருளாதார ரீதியிலான கோரிக்கைகளை நாம் நிறைவேற்றுவோம். எம்மை நம்பி வரும்மக்கள் எவரையும் நாம் கைவிட மாட்டோம்.” – என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles