குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபரொருவர் பலி

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லபெத்த பிட்டகொலகம பகுதியில் தனது தோட்டத்தில் மிளகு பறிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறி மிளகு பறித்து கொண்டு இருந்த நபர் ஒருவர் குறித்த மிளகு கொடி க்குள் இருந்த குளவி கூடு கலைந்து குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் ஹொப்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

மில்லபெத்த பிட்டகொலகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மரணித்த நபரின் சடலம் லுணுகலை ஹொப்டன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M. பியரட்ண தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles