குளவிக்கொட்டு: ஏழு பெண் தொழிலாளர்கள் பாதிப்பு

(க.கிஷாந்தன்)

தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் எழுவர் நேற்று மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எழுவரில் இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ளனர் எனவும், ஏனைய ஐவரும் வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேயிலை மலைக்குள் இருந்த குளவிக்கூடொன்று, கொழுந்து கொய்த பெண்ணொருவர் கால்பட்டதாலேயே கலைந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

Related Articles

Latest Articles