கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ் சவுந்தர் ராகவன் தெரிவித்தார்.
கடந்த 22 ஆம் திகதி 94 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே இவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த 12 பேரில், கொட்டகலை பகுதியிலுள்ள 3 பாடசாலைகலை சேர்ந்த 5 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது. அத்துடன், கொட்டக்கலை – ட்ரேட்டன் தோட்டத்தை சேர்ந்த 9 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.வும் தெரியவந்துள்ளது.
தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையோரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.