கொட்டின குளவிகள் – 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பதுளை, நமுனுகுல பிங்கராவ தோட்ட தொழிற்சாலை பிரிவில் தேயிலை கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 14 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பள்ளகெட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை (13/07) முற்பகல் 10.30 மணியளவில் குளவி கூடொன்று கலைந்து சராமரியாக தொழிலாளர்களை தாக்கியுள்ளது. அண்மை காலமாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குளவிகளின் தாக்கத்திற்குள்ளாவதுடன் மலைகளில் மிகுந்த அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles