கொரோனாவால் நாட்டில் 11 நாட்களில் 161 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்றால் கடந்துள்ள 11 நாட்களில் 161 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி 2020 மார்ச் முதல் நேற்றுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது.

மே முதலாம் திகதி 9 பேரும், 2ஆம்  திகதி 9 பேரும், 3 ஆம் திகதி 13 பேரும், 5 ஆம் திகதி 14 பேரும், 6 ஆம் திகதி 11 பேரும், 7 ஆம் திகதி 19 பேரும், 8 ஆம் திகதி 22 பேரும், 9 ஆம் திகதி 15 பேரும், 10 ஆம் திகதி 26 பேரும், 11 ஆம் திகதி 23 பேரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

Related Articles

Latest Articles