கொரோனா வைரஸ் தொற்றால் கடந்துள்ள 11 நாட்களில் 161 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி 2020 மார்ச் முதல் நேற்றுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது.
மே முதலாம் திகதி 9 பேரும், 2ஆம் திகதி 9 பேரும், 3 ஆம் திகதி 13 பேரும், 5 ஆம் திகதி 14 பேரும், 6 ஆம் திகதி 11 பேரும், 7 ஆம் திகதி 19 பேரும், 8 ஆம் திகதி 22 பேரும், 9 ஆம் திகதி 15 பேரும், 10 ஆம் திகதி 26 பேரும், 11 ஆம் திகதி 23 பேரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.