பதுளை மாவட்டத்தில் வெலிமடையில் கோவிட் 19 தொற்றாளர்கள் இருவர் (இன்று) 18-05-2021ல் முற்பகல் உயிரிழந்துள்ளதாக, வெலிமடை பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்விரு மரணங்களுடன் பதுளை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 பேராக அதிகரித்துள்ளனர். இவ்வகையில் பதுளை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றாளர்களின் அதிகரிப்பும் பன்மடங்குகளாக உயர்ந்து காணப்படுகின்றது.
18-05-2021ல் பதுளை பொது சுகாதாரப் பிரிவில் 15 பேருக்கும், ஹப்புத்தளை பொது சுகாதாரப் பிரிவில் 08 பேருக்கும், ஹல்துமுள்ளை பொது சுகாதாரப் பிரிவில் 16 பேருக்கும், வெலிமடை பொது சுகாதாரப் பிரிவில் 25 பேருக்குமாக 64 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொது சுகாதாரப் பரிசோதகர்களான எஸ். சுதர்சன், எஸ். மணிவண்ணன், ரோய் விஜயசூரிய ஆகியோர் தெரிவித்தனர்.
அத்துடன் முழு பதுளை மாவட்டத்தில் 1925 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுமுள்ளனரென்றும், அவர்கள் தெரிவித்தனர்.
வெலிமடை அரசினர் மருத்துவமனையில் 71, 69 ஆகிய வயதுகளைக் கொண்ட இரு ஆண்களே கோவிட் 19 தொற்றினால் மூச்சுத்தினரலினால் 18-05-2021ல் முற்பகல் உயிரிழந்துள்ளனர்.
பூரண சுகாதார வழிமுறைகளுக்கமைய (இன்று) 18-05-2021ல் மாலையே வெலிமடை பொது மயானத்தில் தகனம் செய்யப்படுமென்றும், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
எம். செல்வராஜா, பதுளை.