‘கொரோனா’விலிருந்து ஒரே நாளில் 1,520 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் ஆயிரத்து 520 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 556 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் அதிகளவானோர் குணமடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அத்துடன் 7 ஆயிரத்து 68 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 288 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் 2020 மார்ச் முதல் இன்றுவரை 59 ஆயிரத்து 922 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles