‘கொரோனா’விலிருந்து மேலும் 698 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 698 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 245 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 195 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles