ஐக்கிய மக்கள் சக்தியின் கன்னி மத்திய செயற்குழுக்கூட்டம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (25) முற்பகல் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
கட்சிக்கான அமைப்பாளர்கள் தேர்வு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டு இநுதி முடிவுகள் எடுக்கப்படும் என அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். 100 அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
அத்துடன் புதிய கூட்டணி அமைக்கும் நடவடிக்கை எந்த கட்டத்தில் உள்ளது எத்தகைய தரப்பினரை உள்வாங்கலாம் என்பது பற்றியும் இக்கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.