ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், இன்று காலை முன்னிலையானார்.
வாக்குமூலமொன்றை பெறுவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உட்பட அக்கட்சியின் எம்.பிக்கள் சம்பிக்கவுள்ள ஆதரவளிக்கும் வகையில் சிஐடி வளாகத்துக்கு சென்றிருந்தனர்.
எதிரணி உறுப்பினர்களை அரசியல் ரீதியில் வேட்டையாடுவதற்காகவே இவ்வாறான விசாரணைகளை அரசு நடத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.