சிறுமியொருவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழுத்திலிருந்து அறுத்து தப்பிச்செல்ல முற்பட்ட திருடன் பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று முற்பகல் 9 மணியளவில் கொட்டகலையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தங்க சங்கிலியை அறுத்தெடுத்த கள்ளன், கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவர் புஷ்பா விஸ்வநாதனின் வீட்டுக்கருவில் ஒளிந்துள்ளார்.
எனினும், பிரதேச மக்கள் அவரை மடக்கி பிடித்து, திம்புள்ள – பத்தன பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் குறித்த திருடன் கிரேட்வெஸ்ரன் பகுதியை சேர்ந்தவரென தெரிய வந்துள்ளதுள்ளதோடு அறுக்கப்பட்ட சங்கிலியில் ஒருபகுதி கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை திம்புள பத்தனை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்