சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது என்று நாடாளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் இதில் கலந்துகொள்ளவுள்ளார் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை எதிர்க்கட்சிகளின் தலை வர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத் தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்தக் கலந்தரையாடலுக்காக எதிர்க் கட்சிகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளன.
எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய அழைப்பை ஏற்று இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கத் தீர்மானித்துள்ளது.
