ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மே 3 ஆம் திகதி வியட்நாமுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஐ.நா. வெசாக் தின விழா இம்முறை வியட்நாமில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்பார். 6 ஆம் திகதிவரை வியட்நாமில் தங்கி இருப்பார்.
இவ்விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையில் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.










