ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05?

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 05 ஆம் திகதி நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என்பதால் அதற்கு தயாராகுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுவுக்கு ஜனாதிபதி தெரியப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய கூட்டணி அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி துரிதப்படுத்தியுள்ளது. வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க ஆகியோர் இதற்கான பணிகளை முன்னெடுத்துவருகின்றனர் எனவும் அறியமுடிகின்றது.

அத்துடன், வடக்கு, கிழக்கை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ரவி கருணாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.

இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை பெற்றுக்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் நகர்வுகளை முன்னெடுத்துவருகின்றது.

Related Articles

Latest Articles