ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ச பக்கம் நிற்கும்வரை அவரால் வடக்கு மற்றும் மலையக தமிழ் மக்களின் ஆதரவை பெறமுடியாது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் உள்ள வாக்காளர்களில் 40 வீதமானோர் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை. 60 சதவீத வாக்குகளை வைத்துதான் கருத்து கணிப்புகள் வருகின்றன. அது உறுதியான முடிவாக அமையாது.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள், ராஜபக்சக்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கும்வரை அவருக்கு ஆதரவு வழங்கமாட்டார்கள். எனவே, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள மக்களுள் பெரும்பாலானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தி பக்கம்தான் தற்போது நிற்கின்றனர்.
ரணில் விக்கிரமசிங்க எப்படிதான் முயற்சித்தாலும் ராஜபக்சக்களுடன் இருக்கும்வரை அவரின் முயற்சி வெற்றியளிக்காது.
தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் என்னைபோன்ற அரசியல்வாதிகளுக்கு வரவேற்பு உள்ளது. அம்மக்களின் உரிமைக்காக முன்னின்றவன் நான். அதனால் சிங்கள புலி என்றுகூட முத்திரை குத்தினர்.” – என்றார் டிலான் பெரேரா.