டயலொக் – தெரண பங்களிப்புடன் நிவாரணப்பணிகள் முன்னெடுப்பு!

டயலொக் ஆசி ஆட்டா மற்றும் ‘மனுசத்தெரண’ பங்குடமையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தக்க சமயங்களில் தேசத்திற்கு சேவை செய்வதில் டயலொக் நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்ற முயற்சிகளின் மற்றுமொரு அங்கமாக இலங்கையின் முன்னணி தொலை தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா, தெரணதொலைக்காட்சி அலைவரிசையுடன் இணைந்து ‘டயலொக் உடன் மனுசத்தெரண” முயற்சியின் 2 வதுகட்டத்தை ஆரம்பித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முன்வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தைக் குறைக்க அரசாங்க சுகாதார அதிகாரிகளின் ஆணைப்படி சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் பிரகாரம் உலர் உணவுப் பொருட்களின் கொள்வனவு, பொதியிடல் மற்றும் விநியோக நடவடிக்கைகளின் முழுசெயல் முறைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த உதவி வழங்கல் முயற்சியானது, நாட்டில் கொரோனா வைரஸ் முதன் முதலாக பரவிய காலகட்டத்தில் இலங்கை மக்களின் நலனுக்கு இடமளிக்கும் நோக்குடன் டயலொக் ஏற்பாடு செய்த இதேபோன்ற முயற்சிகளின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

டயலொக் உடன் மனுசத்தெரண’ ‘டயலொக் உடன் சிரசலெகதுகம”டயலொக் உடன் இதன் மனுசத்வயேசத் காரய’ மற்றும் ‘வசந்தம் டிவி/எஃப். எம்மனித நேயப்பணி உடன்டயலொக்’ போன்ற உதவி முயற்சிகளின்கீழ் நாட்டில் 22 மாவட்டங்கள் மத்தியில் 400 இற்கும் மேற்பட்டகிராமங்களில்128,000இற்கும் மேற்பட்ட மக்களுக்கு சுமார் 6 வாரங்களுக்கான தினசரி உலர் உணவுப் பொதிகள் விநியோகம் செய்யப்பட்டிருந்தன.

தான் செயல்படும் சமூகங்கள்மீது அக்கறைகொண்ட ஒரு வர்த்தக நிறுவனம் என்ற வகையில், சமூகங்களுக்கு மிகவும் உதவி தேவைப்படும் இக்கட்டான கால கட்டங்களில் ஒரே தேசமாக ஒன்றுபட்டு கொவிட்-19 தொற்று நோய் நிலைமையைச் சமாளிக்கும் கூட்டு முயற்சியை வலுப்படுத்துவதற்கும் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் டயலொக் ஆசி ஆட்டாமேற் கொண்டுவருகிறது.

Related Articles

Latest Articles