தப்பியது சபாநாயகரின் தலை! நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு!!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக வாக்குகளும் 75, எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஆளுங்கட்சியும், அதன் பங்காளிக்கட்சிகளும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் ஆதரவாக வாக்களித்தன.

தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதொகாவினர் எதிராக வாக்களித்தனர்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமாகி, 3 நாட்கள் விவாதம் நடத்தப்பட்டநிலையிலேயே இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

 

Related Articles

Latest Articles