நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் சிஐடியினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துருகிரிய, பனாகொட பகுதியிலேயே 1989 ஆம் ஜனவரி 13 ஆம் திகதி இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்சார சபையின் பொறியாளர் ஒருவரை கொலை செய்து, உடலை துண்டுத் துண்டாக வெட்டி மறைத்து வைத்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் ஹேமாகம நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 68 வயதுடையவர் எனவும், அவர் தனது தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழில் தனது அடையாளத்தை அடையாளம் காண முடியாத வகையில் மாற்றியமைத்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதான சந்தேகநபரின் மனைவியும் தலைமறைவாக வாழ்ந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1990 ஆம் ஆண்டில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரே தலைமறைவாகியுள்ளனர். நபர்கள் இல்லாமல் வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.