திகாவின் அதிரடியால் ஓட்டமெடுக்கும் திலகரின் சகாக்கள்!

தொழிலாளர் தேசிய முன்னணியிலிருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகரை நீக்குவதற்கு திகாம்பரம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், தொழிலார் தேசிய சங்கத்திலுள்ள திலகர் அணி உறுப்பினர்கள் தாமாகவே வெளியேறி வருகின்றனர்.
 
திலகர் அணி உறுப்பினர்களை திகாம்பரம் களையெடுத்துவிடுவார் என்ற அச்சத்தாலேயே அவர்களாகவே வெளியேறிவருகின்றனர். இதன்படி தொழிலாளர் தேசிய முன்னணியில் இருந்து விலகும் அறிவிப்பை மஸ்கெலிய பிரதேச சபை உறுப்பினர் சுரேஷ் குமார் விடுத்துள்ளார்.
 
அத்துடன், திகாவை கடுமையாக விமர்சித்தும், திலகரை தனது அரசியல் ஆசான் என விளித்தும் அவர் விரிவானதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஏனைய சில உறுப்பினர்களும் வெளியேறும் முடிவை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
 
 

Related Articles

Latest Articles