திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு கணவன் பெண் என்பதை கண்டுபிடித்த மனைவி!

டில்லி, வதோதரா பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாடு  தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

” எனது கணவர் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார். எனக்கு பெற்றோர் 2-வது திருமணம் செய்து வைக்க திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தனர். இதன்மூலம் டெல்லியை சேர்ந்த வாலிபர் ஒருவரை எனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

கடந்த 2014-ம் ஆண்டு எனக்கும் அந்த வாலிபருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. எனது முதல் கணவர் மூலம் பிறந்த மகளுடன் நாங்கள் மூவரும் தனியாக வசித்து வந்தோம்.

திருமணம் முடிந்த பின்பு நாங்கள் இருவரும் தேனிலவுக்கு காஷ்மீர் சென்றோம். அப்போது எனது கணவர் என்னுடன் உறவு கொள்ள மறுத்தார். தனக்கு உடல் நலக்குறைவு இருப்பதால் இப்போதைக்கு உறவு கொள்ள வேண்டாம் என்றார். நானும் அதனை நம்பினேன். ஆனால் மாதங்கள் பல கடந்த பின்னரும் அவர் என்னோடு உறவு கொள்வதில்லை.

கணவரின் நடத்தை எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது பற்றி நான் அவரிடம் கேட்டபோது கொல்கத்தா சென்று ஆபரேசன் செய்து கொண்டால் எல்லாம் சரியாகி விடும் என்றார். அதற்காக கொல்கத்தாவுக்கும் சென்றார்.

ஆபரேசன் செய்த பின்பும் அவர் சரியாகவில்லை. அதன்பின்பு அவர் செய்து கொண்ட ஆபரேசன் என்ன என்று விசாரித்த போதுதான் அது பெண்ணாக இருந்து ஆணாக மாறுவதற்கான பாலியல் மாற்ற ஆபரேசன் என தெரியவந்தது. இதனை கண்டுபிடிக்க எனக்கு 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவர் என்னை மிரட்டுகிறார்.

இயற்கைக்கு மாறான உறவு கொண்டு என்னை சித்ரவதை செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles