திருமதி உலக அழகியாக தெரிவுசெய்யப்பட்ட கரோலின் ஜுரி, தனக்கு சூட்டப்பட்ட மகுடத்தை மீள கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் அவர் காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளார்.
திருமதி இலங்கை அழகி போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவுக்கு சூட்டப்பட்ட கிரீடத்தை, கரோலின் ஜுரி மேடையில் வைத்து கழற்றியமை கடும் கண்டனத்துக்கு உள்ளானது. அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையிலேயே அவர் பட்டத்தை மீள ஒப்படைக்கபோவதாக அறிவித்துள்ளார்.










