துறைமுக நகரம் கொழும்பு மாவட்டத்துடன் இணைப்பு

துறைமுக நகரமானது கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஓர் அங்கமாகவே இருக்கும். உள்நாட்டு சட்டமே அங்கும் நடைமுறையில் இருக்கும் – என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” துறைமுக நகரில் எமது நாட்டிலுள்ள சட்டமே நடைமுறையில் இருக்கும். கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஓர் அங்கமாகவே அப்பகுதி இருக்கும். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியானது இலங்கைக்குரிய பூமிப்பகுதியாகவே இருக்கும். எனவே, நாட்டின் சட்டக்கட்டமைப்பை மீறும் வகையில் எவ்வித நடவடிக்கையும் இடம்பெறவில்லை. வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதற்காகதுவே குத்தகைக்கு வழங்கப்படுகின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles