ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் 10 பேர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் கதை அடிபடுகின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நெருக்கமான சிலரின் செயற்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருக்கும் மேற்படி 10 பேரும், விரைவில் தாய்வீடு திரும்புவதற்கான பேச்சுகளை ஆரம்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், அதிருப்தியில் இருக்கும் உறுப்பினர்களை திருப்திப்படுத்தி, கட்சியில் தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரியவருகின்றது.