நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
இதன்படி சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், மேல், வடமேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) காலை வேளையில் மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.