கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் (11) 156 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று மாலை வெளியிட்டார்.
87 ஆண்களும், 69 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நேற்று மாத்திரம் 3 ஆயிரத்து 39 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
		