நாட்டில் மேலும் 3,039 பேருக்கு கொரோனா – 156 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் (11) 156 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று மாலை வெளியிட்டார்.

87 ஆண்களும், 69 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நேற்று மாத்திரம் 3 ஆயிரத்து 39 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles