நானுஓயா – ரதல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் பலியானதுடன், 53 பேர் காயமயாடைந்திருந்தனர். இவ் விபத்தில் பலத்த சேதமடைந்த பஸ் ஒரு மாதமாகியும் நுவரெலி – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பிரதான நகரில் வீதியோரம் காட்சி பொருளாக உள்ளது.
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா நகரம் உள்நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூடுதலாக விரும்பும் நகரமாகும் , நுவரெலியா பகுதிக்கான புகையிரத சேவையின் மத்திய நிலையமாகவும் நானுஓயா நகரம் காணப்படுவதால் இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுப்பது போல் கையடக்க தொலைபேசியிலும் , கேமரா மூலமும் பேருந்தினை படம் பிடித்தும் செல்கின்றனர்.
அத்துடன் வீதியோரம் அகற்றப்படாமல் இருக்கும் பேருந்தினால் ஏனைய வாகன சாரதிகளிடையே விபத்து பீதியை ஏற்படுத்தி வருகிறது என தெரிவிக்கின்றன .
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நானுஓயா பிரதான நகரில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தினை பொது மக்கள் யாரும் பார்வையிடாத வகையில் மறைமுகமான இடத்தில் அல்லது துணி , கலர் பொலித்தீனை பயன்படுத்தி முழுமையாக மூடி வைக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என
வாகன சாரதிகளும் , பொது மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
நானுஓயா நிருபர்
