குழந்தைகள் முன்பு கவனாமாக நடந்து கொள்ளுவது அவசியமாகும்.
ஏனெனில் நாம் பேசுவதை பார்த்தும், நாம் நடந்து கொள்வதை பார்த்தும் தான் நமது குழந்தைகளும் அதனை பின்பற்றும்.
அந்தவகையில் குழந்தைகள் முன்பு செய்ய கூடாதா சில செயல்கள் பற்றி இங்கு பார்ப்போம்.
- வீட்டில் இருக்கும் பெரியவர்களை அன்போடும், மரியாதையுடன் அழைப்பது சிறந்தது.
- உங்கள் உறவினர்கள் பற்றியோ, அலுவலக சக ஊழியர்கள் பற்றியோ அல்லது அக்கம்பக்கம் இருப்பவர்களின் அறிவுக்குறைவு பற்றியோ, குழந்தைகள் முன் கேலியாகப் பேசிக்கொள்ள கூடாது. ஏனெனில் இதைக் கேட்கும் குழந்தைகளும் சம்பந்தப் பட்டவர்களைப் பார்க்கும்போது உதாசீனம் செய்வார்கள்.
- திரையில் வரும் நடிகர், நடிகையாக இருந்தாலும் சரி, நம்முடன் நாள்தோறும் தொடர்பிலிருக்கும் சாதாரண மனிதர்களாக இருந்தாலும் சரி, அவர்களைப் பற்றி நமக்குள் பேசிக்கொள்ளும்போதும், `அவர் இவர்’ என்ற வார்த்தையையே பயன்படுத்துவது சிறந்ததாகும்.
- ஒருவரின் அறிவுக் குறைபாட்டை, தவறான நடவடிக்கையைப் பற்றி, `அவர்கள் இப்படி நடந்துகொண்டால் சரியாக இருக்கும். இப்படிப் பேசினால் சரியாக இருக்கும்’ என்று அக்கறையுடன் விவாதியுங்கள். அதைக் கேட்கும் குழந்தைகளுக்குப் பிறரின் குறைபாட்டைத் திருத்தும், உதவி செய்து அரவணைக்கும் குணம் உண்டாகும்.
- காய்கறிக்காரன் , கீரைக்காரி, மீனகாரன் என்றும் அவர்களின் தொழில்சார்ந்து பேசுவதை தவர்க்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்குள்ளும் இந்த எண்ணத்தைக் விதைக்கும். ஆகவே, யாராக இருந்தாலும் நமக்குள் பேசிக்கொள்ளும் போதும் மரியாதையுடன் பேசுவது நல்லது.