நாளை தீர்வு இல்லையேல் போராட்டம் உச்சம் பெறும் – இ.தொ.கா. எச்சரிக்கை!

அடையாள வேலை நிறுத்த போராட்டம் அமோக வெற்றிபெற்றுள்ளது. இந்த முதல் முடக்கம் முதலாளிமார் சம்மேளனத்தை முடக்கியுள்ளது. விடாப்பிடியாக இருந்த கம்பனிகளுக்கு தொழிலாளர்களின் ஒன்றுமை எச்சரிக்கையாகும்.நாளைய பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு தொடர்பில் சாதகமான முடிவு கிடைக்கவில்லையென்றால் போராட்டம் மேலும் மூர்க்கமடையும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.கா உபதலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர்தெரிவித்தனர்.

மக்கள் மத்தியில் ஒற்றுமையில்லையென்ற நினைப்பிலேயே கம்பனிகள் செயற்பட்டு வந்தன. இன்று தொழிலாளர்களின் ஒற்றுமை, பலம் என்பன காண்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல பொதுவான விடயம், நியாயமாக இருந்தால் இணைந்து போராடுவதற்கு தயார் என்ற தகவலையும் மக்கள் வழங்கியுள்ளனர்.

அதே நேரம் கூட்டு ஒப்பந்தம் அடிமை சாசனம் என்று பலர் கூறுகிறார்கள் உலகளவில் கூட்டு ஒப்பந்தம் மூன்று வருடத்திற்கு ஒரு முறைதான் நடைபெற்றது. ஆனால் இங்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்றது. அப்படி இருக்கும் போது இது அடிமை சாசனம் என்று கூறுவது எவ்வாறு. அதே நேரம் இன்றுள்ள பல தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் இருப்பதனையே விரும்புகின்றனர், ஏன் என்றால் அதில் சம்பளம் மாத்திரமன்று நலன்புரிவிடயங்களும் அடங்கியிருக்கிறது.

நாளை பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. தொழிலாளர்களின் பலத்தைக்கண்டு கம்பனிகளும் நடுங்கியுள்ளன. சாதகமான தீர்வு கிடைக்குமென நம்புகின்றோம். சம்பள உயர்வு எப்போது கிடைக்கும் என்பது தொடர்பான அறிவித்தல் நாளை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இது இ.தொ.காவின் பலத்தைக்காட்டுவதற்காக நடத்தப்பட்ட போராட்டமல்ல. கம்பனிகளுக்கு எதிரானது. மக்கள் தமது பலத்தைக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்த்த முடிவு நாளை திங்கட்கிழமை சம்பள நிர்ணய சபையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும்.

மக்களின் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. ஒட்டுமொத்த தொழிலாளர்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்து தமது பலத்தை கம்பனிகளுக்கு நிரூபித்துள்ளனர். இ.தொ.கா. எப்போதும் மக்கள் பக்கம் நின்றே அனைத்து முடிவுகளை எடுக்கும் இவ்வாறு எடுக்கப்பட்ட முடிவுகளால் தொழிலாளர்கள் பல நன்மைகளை அடைந்துள்ளனர்.

நாளைய தினம் சம்பள நிர்ணய சபையில் மக்கள் எதிர்பார்த்த முடிவு வருமென்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.

நன்றி – தினகரன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles