இலங்கையால் தேடப்பட்டுவரும் குற்றவாளியும் பாதாள உலகக் குழு உறுப்பினரான அங்கொட லொக்கா இந்தியாவில் கொலை செய்யப்பட்டுள்ளார் என புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் வைத்தியசாலையொன்றில் ஒருவாரம் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
அங்கொட லொக்காவுடன் இந்தியாவில் வசித்துவந்த முல்லேரியா ரஹ்மான் என்பவரின் மனைவியே உணவில் விசத்தை கலந்து அங்கொடை லொக்காவை கொலை செய்துள்ளார் என்றும், இதன் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்புபட்டுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை. அங்கொட லொக்கா கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.