நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 25 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திம்புள்ள – பத்தன சுகாதார பிரிவில் 10 பேருக்கும், ஹட்டன் சுகாதாரப்பிரிவில் 14 பேருக்கும், வலப்பனையில் ஒருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. தொற்றாளர்கள் அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 796 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 75 வீதமானோர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் நேற்று 122 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 31 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.