நுவரெலியா, ஒலிபண்ட் தோட்டத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த வயோதிபர்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். பெருமாள் வடிவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. கவலையை போக்குவதற்கான மருந்தும் கிடையாது. அது கோழைத்தனமான முடிவாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவரும் தற்கொலையை ஊக்குவிக்ககூடாது)

தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

தேசிய மனநல உதவி இலக்கம் 1926
இலங்கை சுமித்ரயோ 011 2696666
CCC line 1333

Related Articles

Latest Articles