நுவரெலியா, சாந்திபுர பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் விவசாய காணியில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு நபரொருவர் பலியாகியுள்ளார்.

இவ்வனர்த்தம் இன்று 03.09.2023 அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

மைக்கல் எக்லஸ் என்ற 65 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது விவசாய தோட்டத்தில் மரக்கறி வகைகளுக்கு நீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த மின்சார கம்பியினை அப்புறப்படுத்த முயற்சி செய்தபோதோ மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

நிருபர்கள் டி. சந்ரு, கௌசல்யா.

Related Articles

Latest Articles