நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 48 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ சுகாதார மருத்து அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், லிந்துலை சுகாதாரப்பிரிவில் 14 பேருக்கும், நுவரெலியா மருத்துவ அதிகாரி பிரிவில் 11 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
தொற்றாளர்கள் அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 857 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.










