அரசியலில் நேரடியாக மோதுவதற்கு முதுகெலும்பற்றவர்கள், நள்ளிரவில் தடுமாறி, கோழைத்தனமான அரசியலை முன்னெடுக்கின்றனர் என்று சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளரும், சட்டத்தரணியுமான அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார்.
சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் முதலாவது கொடி அண்மையில் டயகம பகுதியில் ஏற்றப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு அக்கொடி கழற்றப்பட்டு, மலையக மக்கள் முன்னணியின் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அனுசாவிடம் வினவியபோது, அவர் கூறியதாவது,
” இது தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அரசியலில் நேரடியாக மோத முடியாதவர்களே, இரவில் தடுமாறுகின்றனர். அரசியல் கோழைகளுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்.” – என்றார்.
