பசறை பிரதேச சபைக்குட்பட்ட எல்டப் தன்னமலை பகுதியில் சீரற்ற காலநிலையால் சேதமடைந்த மூன்று வீடுகளையும் உடனடியாக சீரமைக்குமாறு தோட்ட முகாமையாளருக்கு, பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த அனர்த்தம் தொடர்பில் பசறை அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்தே 24 மணிநேரத்துக்குள் நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.
அத்துடன், பசறை பிரதேச செயலாளரின் நிர்வாக உத்தியோகஸ்தருடன் கலந்துரையாடி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குமாறு செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
