பதுளை வைத்தியசாலையில் சாதாரண நோயொன்றிற்கு சிகிச்சை பெறவந்த பசறை பிரபல வங்கியொன்றின் பெண் ஊழியர் மற்றும் பதுளை பிரபல ஹோட்டல் விடுதி பிரதி முகாமையாளர் ஆகியோருக்கு சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட உடன் பரிசோதனைகளில் இவ் இருவருக்கும் கொரோனாதொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
பதுளையை வசிப்பிடமாகக்கொண்டு, பசறையில் பிரபல தனியார் வங்கியொன்றில் ஊழியராக இருந்துவந்த 22வயது நிரம்பிய பெண், தமக்கேற்பட்ட சாதாரணவருத்தமொன்றின் காரணமாக, பதுளை அரசினர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட உடன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இவருடன் தொடர்பு கொண்டிருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் ஏனையவர்கள் உட்பட 18பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டள்ளனர்.
அடுத்து, பதுளையில் பிரபல ஹோட்டல் விடுதி பிரதிமுகாமையாளரொருவர் சாதாரணவருத்தம் காரணமாக, பதுளை அரசினர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட உடன் பரிசோதனையில் அவருக்கும் கொரோனாதொற்று உறுதியாகியுள்ளது.
எம். செல்வராஜா, பதுளை