‘பதுளை மாவட்டத்தில் இதுவரை 34 பேரின் உயிரை பலியெடுத்த கொரோனா’

கொரோனா வைரஸ் தொற்றால் பதுளை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது – என்று பதுளை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஹாலி எல மற்றும் தியத்தலாவை ஆகிய இடங்களில் ஆணொருவரும் , பெண்ணொருமாக இருவர் நேற்றும் இன்றும் உயிரிழந்த்யடுதே மேற்படி அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

பதுளை மற்றும் ஹாலிஎலயில் 10பேர் , தியத்தலாவையில் 08பேர், வெளிமடையில் 07பேர், பண்டாரவளையில் 06பேர், பசறையில் 02பேர் மஹியங்கனையில் 01 என்றடிப்படையிலேயே 34பேர் கோவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles