பதுளை மாவட்டத்தில் 10 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக உயர்த்துவது தொடர்பில் தமிழ் கல்வி அமைச்சில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இதன்போது செந்தில் தொண்டமான், அப்பாடசாலைகளில் நிலப்பரப்பு மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்யுமாறு தமிழ் கல்வி பிரிவின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும் இப்பாடசாலைகளில் விஞ்ஞான பாடத்திட்டத்தை தொடங்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு பெயர் பட்டியலில் சிபாரிசு செய்தமைக்காக அப்பாடசாலையின் அதிபர்கள் செந்தில் தொண்டமானுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.