இரத்தினபுரி, பலாங்கொடை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது மரண பரிசோதனைமூலம் தெரியவந்துள்ளது.
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த குறித்த மாணவி கடந்த 22 ஆம் திகதி வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகளும் இடம்பெற்றன.
பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.