இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் FU Xiao, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இதன்போது, பாதுகாப்புச் செயலாளரும் சீன பாதுகாப்பு ஆலோசகரும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இருதரப்பு பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பில் சீன தூதரகத்தின் அதிகாரிகளும் கலந்துக் கலந்துக் கொண்டனர்.










