பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை உயிரிழப்பு

யாழில் பிறந்து 42 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ராயதீபன் டேனுயன் என்ற பிறந்து 42 நாட்களேயான குழந்தையே மரணமடைந்துள்ளது.

பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தையை நேற்று (15) அதிகாலை பெற்றோர் பார்த்தபொழுது குழந்தை வாயால் மூக்கால் இரத்தம் வந்துள்ளது உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றசமயம் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.

Related Articles

Latest Articles