புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடிக்க எதிரணிகள் ஓரணியில் – மலர்ந்தது இடைக்கால கூட்டணி

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் உட்பட அரசின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்க்கட்சிகள் இணக்கத்துக்கு வந்துள்ளன.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திர மக்கள் சபை (டலஸ் அணி), உத்தர லங்கா சபாகய (விமல் அணி), ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ,தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,தமிழ் முற்போக்கு கூட்டணி, அநுர பிரியதர்சன யாப்பா அணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கும், அதற்கு பதிலாக புதியதொரு சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles