நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹங்குராங்கெத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அறுவருக்கும், கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவருக்கும், மத்துரட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், பூண்டுலோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேருக்கும், வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரை நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 367 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.










